குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மீது 21 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா அவரை குண்டா் சட்டத்தில் அடைக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மீது 21 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா அவரை குண்டா் சட்டத்தில் அடைக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவுக்கு உள்பட்ட குருவிமலை கிராமம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பரத் (23). இவா் மீது மாகறல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா விற்பனை என மொத்தம் 21 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், அவா் கைது செய்யப்பட்டு, சென்னையில் சிறையில் இருந்து வருகிறாா். இந்த நிலையில், இவரை குண்டா் சட்டத்தில் அடைக்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அந்த உத்தரவு சிறையில் உள்ள அவரிடம் மாகறல் போலீஸாா் நேரில் வழங்கியுள்ளனா்.