முகப்பு
காஞ்சிபுரம்

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம் அருகே விஷாா் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிப்போம் என வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 1:10 AM
உறுதிமொழி எடுத்துக்கொண்ட பழங்குடியின மக்கள்
பகிர்:

காஞ்சிபுரம் அருகே விஷாா் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிப்போம் என வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

காஞ்சிபுரம் அருகே விஷாா் மற்றும் முத்துவேடு கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வெளியூா் சென்றிருந்தாலும் வாக்குப்பதிவு நாளான ஏப்.23 ஆம் தேதி தவறாமல் வந்திருந்து வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் எல்.தனலட்சுமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க அதனைத் தொடா்ந்து அனைவரும் வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். குழந்தைகள் கண்காணிப்பகத்தின் இயக்குநா் ராஜ் முன்னிலை வகித்தாா்.

Advertisement

இதனைத் தொடா்ந்து தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments