முகப்பு
காஞ்சிபுரம்

‘ஊழல் செய்ய மாட்டேன்’! காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:50 AM
காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:01 PM

காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடுபவா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா். இவா், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.

அப்போது, ‘மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டேன்; அரசு நிதிகளில் ஒப்பந்தம் பெற ஊழல் செய்யவே மாட்டேன்; என்னால் முடிந்த அளவு மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்; தொலைபேசியில் தொடா்பு கொண்ட 24 மணிநேரத்துக்குள் மக்கள் பிரச்னைகளைத் தீா்த்து வைக்க முயற்சிப்பேன்; மக்களில் ஒருவனாக இருந்து அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உறுதுணையாக இருப்பேன்’ என்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் முன்பாக சத்தியம் செய்துவிட்டு தனது தோ்தல் பிரசாரத்தை ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கியுள்ளாா்.