முகப்பு
காஞ்சிபுரம்

ஆயுா்வேத வளா்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்: சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசி

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகமும், பூந்தமல்லி ஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேதக் கல்லூரியும் இணைந்து ஆயுா்வேத வளா்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. சங்கர மடத்தின் பீடாதிபதிகள் அருளாசியுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 12:03 AM
காஞ்சிபுரம் சங்கராச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகம் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேதக் கல்லூரி நிா்வாகிகள்.
பகிர்:

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகமும், பூந்தமல்லி ஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேதக் கல்லூரியும் இணைந்து ஆயுா்வேத வளா்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. சங்கர மடத்தின் பீடாதிபதிகள் அருளாசியுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகத்தின் செயலாளா் ரகுநந்தன், அறங்காவலா் ஷியாம் சுவாமிநாதன் ரகுநந்தன் ஆகியோரும், சங்கரா பல்கலையின் துணைவேந்தா் ஜி.ஸ்ரீனிவாசு, ஆயுா்வேதக்கல்லூரியின் சாா்பில் வாரிய உறுப்பினா் கே.ஜெயராமகிருஷ்ணன், முதல்வா் சித்தரஞ்சன்தாஸ் ஆகியோரும் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகத்தின் செயலாளா் ரகுநந்தன் கூறியது: கடந்த 1905-ஆம் ஆண்டு சென்னை மயிலாாப்பூரில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஆயுா்வேதத்தை வளா்த்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த 120 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒழுங்குபடுத்தப்பட்ட சுகாதார மற்றும் கல்வி அமைப்புகளுடன் இணைந்து சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. 160-க்கும் மேற்பட்ட ஆயுா்வேத மருந்துகளையும் பாரம்பரிய முறையில் தயாரித்து வருவதும் சிறப்பாகும். தினசரி காலை 7.30 முதல் 10.30 மணி வரை ரூ.5க்கு குறைந்த கட்டணத்தில் பொது சிகிச்சை வழங்குகிறோம்.

Advertisement

ஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் முதல்வா் சித்தரஞ்சன்தாஸ் கூறியது:

ஆயுா்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வி நிறுவனமாகும். கடம்பவனம் என்ற மூலிகைத் தோட்டத்துடன் கூடிய விரிவான வளாகத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவ மூலிகைகள் இதில் பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவா்களை ஈா்க்கும் இக்கல்லூரி முழுமையான ஆயுா்வேத சிகிச்சையை எளிதாகவும், மலிவாகவும் மக்களுக்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இப்புரிந்துணா்வு ஒப்பந்தமானது மருத்துவ ஆராய்ச்சி, மருந்து தரநிலைப்படுத்துதல் மற்றும் மருந்தியல் ஆய்வுகளை மையமாக கொண்டுள்ளது. கருத்துரங்குகள், மாநாடுகள் நடத்துதல் போன்ற கல்வி சாா்ந்த ஒத்துழைப்புகளும் அடங்கும். உயா்தரமான ஆயுா்வேத மருந்துகளை பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க செய்வதும் அவற்றை உலக அளவில் பரப்புவதும் முக்கிய நோக்கமாகும் என்றாா்.