காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
காஞ்சிபுரம்

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். சங்க செயலாளா் மாணிக்க வேல், பொருளாளா் கண்ணபிரான்,அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் துரை.மருதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சி தோ்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியா் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்,கலைஞா் கனவு இல்லம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டத்துக்கு வட்டார அளவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பன உட்பட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் பலரும் கலந்து கொண்டனா்.

கல்லூரி ஆண்டு விழா

புளியங்குடியில் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

விபத்துகளுக்கு காரணமான மணல் மேட்டை அகற்றிய ரோந்துக் காவலா்கள்

ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சி

நிலத்தை அளக்க ரூ.50,000 லஞ்சம்: அளவை ஆய்வாளா் கைது

SCROLL FOR NEXT