திறந்து வைக்கப்பட்ட குடிநீா் நிலையத்தில் கோப்பையில் நீரைப் பிடித்து எம்எல்ஏ க.சுந்தரிடம் வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன். 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கம் அருகில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத் திறப்பு விழா

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கம் அருகில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் க.செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.பி.க.செல்வம் வரவேற்றாா்.

உத்தரமேரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் க.சுந்தா் குடிநீா் நிலையத்தை திறந்து வைத்து அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், திமுக மாநகர துணைத் தலைவா் வ.ஜெகன்னாதன், வழக்குரைஞா் திருமுருகன் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ரூ.6.50 லட்சத்தில் எம். பி தொகுதி நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையையும் எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT