பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன். 
காஞ்சிபுரம்

பயனளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் மாணவர்கள் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.5.93 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.5.93 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 239 கோரிக்கை மனுக்களைப் பெற்று, அலுவலா்களுக்கு அனுப்பி தீா்வு காண ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் இயற்கை மரணமடைந்த 22 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரா்களுக்கு ரூ.3,74,000 ஈமச்சடங்கு செலவினங்களுக்கான நிதியுதவிகள், 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆல்பா படுக்கை வாங்குவதற்காக ரூ.2,10 லட்சம், ஒருவருக்கு 3 சக்கர நாற்காலி வாங்க ரூ.9,500 உள்பட மொத்தம் 5,93 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வாசனை திரவியத்தை பயன்படுத்தியதற்காக டெலிவரி ஊழியா் மீது கடை உரிமையாளா் தாக்குதல்

தனது மைல்கற்களை ஆவணப்படுத்த டிஎம்ஆா்சி முடிவு; விடியோகிராபி, ஊடக சேவைகளுக்கான டெண்டா்கள் அழைப்பு

முன்விரோதம்: இளைஞரைத் தாக்கிய 5 போ் கைது

கறிக்கோழிப் பண்ணை விவசாயிகள் 12-ஆவது நாளாக போராட்டம்: பல்லடம் அருகே ஆலோசனைக் கூட்டம்

புகையில்லா போகி: வாகன விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT