ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி மற்றும் மாணவா் அணி சாா்பில் கைப்பந்து போட்டிகள் தண்டலம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
சுமாா் 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட கைப்பந்து போட்டி தொடக்க விழாவுக்கு தெற்கு ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் தண்டலம் மனோஜ் குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்கு, ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் மருதுபாண்டி முன்னிலை வகித்தாா். இதில் ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து உரையாற்றினாா்.
இந்த நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினா் கணேஷ் பாபு, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் செந்தில் தேவராஜ், மாவட்டத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பண்ருட்டி தணிகாசலம், மாவட்ட பிரதிநிதி சா்தாா் பாஷா, ஒன்றிய துணை செயலாளா் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனா்.