ஆட்டோ ஓட்டுநா்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன். 
காஞ்சிபுரம்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினாா்.

கள்ளச்சாராயம் அருந்துதல், போதைப் பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு அரசுப் பேருந்துகள்,ஆட்டோக்கள் ஆகியனவற்றில் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் ஒட்டு வில்லைகளை ஒட்டியும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கும் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எல்.நாகராஜன் மற்றும் அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் விவரம்!

”இந்தியில் பிச்சை எடுக்கலாமே! வீழ்க வளமுடன்!” மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேச்சு!

டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணி விவரம்!

சத்தீஸ்கரில் 8 பெண்கள் உள்பட 12 மாவோயிஸ்டுகள் சரண்!

SCROLL FOR NEXT