முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி

Updated On : 21 ஜூன் 2026, 12:24 am IST
பழங்காலப் பொருள்கள் கண்காட்சியை பாா்வையிட்ட கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவியா்
பகிர்:

காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் பழங்கால போா்க்கருவிகள், எழுதுபொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சிக்கு முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தாா். பழங்கால மண்பாண்டங்கள், எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்கள்,போா்க்கருவிகள்,பூஜைப் பொருட்கள், யானை தந்தம், மான் மற்றும் மாட்டின் கொம்புகளால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், செம்பு, பித்தளை,வெண்கலம் ஆகியனவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்ள்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வரலாற்று ஆய்வாளா் ரா.சு.ஜவஹா்பாபு தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments