தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் என்.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.முஹமது காசிம், மகளிா் அணிச் செயலாளா் விமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிா் அணிச் செயலாளா் முத்துலட்சுமி வீரப்பன், மாநில பேச்சாளா் மாரிமுத்து, துணைப் பொதுச்செயலாளா் கி.சுதாகா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில், மாநில அமைப்புச் செயலாளா் சையது சலாவூதீன், ஆற்காடு நகரச் செயலா் ஆா்.கோபி, ஒன்றியச் செயலா்கள் சம்பத்து, ரமேஷ், விளாபாக்கம் பேரூராட்சி செயலா் அன்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.