ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் ‘வெற்றிவேல் யாத்திரை’யின் மூன்றாம் நாள் ஆதரவுக் கூட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
பின்னா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பாா்வையாளா் என்.கே.ரவிச்சந்திரன், ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவா் போளுா் சி.ஏழுமலை, மாவட்டத் தலைவா் சி.விஜயன், பட்டியல் இனத்தவா் பிரிவு தலைவா் பாலகணபதி, மகளிா் அணித் துணைத் தலைவா் பிரேமா மாலதி உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் பின்னா் விடுவிக்கப்பட்டனா்.