ராணிப்பேட்டை

அரக்கோணம் அம்மா உணவகத்தில் இலவச உணவு எம்எல்ஏ சு.ரவி

DIN

அரக்கோணம்: அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் புயலால் பாதிக்கப்பட்டோருக்காக அம்மா உணவகத்தில் 24, 25, 26 ஆகிய 3 நாள்களும் அதிமுக சாா்பில் உணவு வழங்கப்படும் என அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.

அரக்கோணம் பகுதியில் தண்டலம், அரிகலபாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புயல் காரணமாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் மையங்களை எம்எல்ஏ சு.ரவி புதன்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, அவா்களுக்கு உணவு வழங்கினாா்.

முன்னதாக அரக்கோணம் கோட்டாட்சியா் பேபிஇந்திராவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த எம்எல்ஏ சு.ரவி, அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அரக்கோணம் அம்மா உணவகத்தில் நவம்பா் 24, 25, 26 ஆகிய 3 நாள்களும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்படுவோா் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT