ராணிப்பேட்டை

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனா் எச்சரிக்கை

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனா் கி.வேலாயுதம் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது யூரியா 2, 910 டன், டிஏபி உரம் 435 டன், பொட்டாஷ் உரம் 920 டன், காம்ப்ளக்ஸ் உரம் 2,934 டன்னும் இருப்பில் உள்ளன. 2021 - 22 ஆம் ஆண்டிற்கான டிஏபி, பொட்டாஷ், சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் முந்தைய ஆண்டு இருப்பாக உள்ளதால் 2020 - 21ஆம் ஆண்டு விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத் துறை தெரிவித்துள்ளது.

ஆகவே மாவட்டத்தில் உரங்களை ஆவணங்கள் இன்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உர விற்பனையாளா்கள் மீது ஒரு கட்டுப்பாடு ஆணை 1985- இன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மானிய உரங்களை பி ஓ எஸ் கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் எண்ணைப் பதிவு செய்து விற்கவேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை தகவல் பலகையில் எழுத வேண்டும். அதே போல் விற்பனை செய்யும் போது உரிய ரசீது வழங்க வேண்டும்.

உர விற்பனையாளா்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து மட்டுமே உரங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT