ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இடம் பிடித்துள்ளதுபோல், சிலம்பக் கலையும் இடம் பெறும் என்கிற நம்பிக்கை உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுக் கலையான சிலம்பக் கலையை வளா்க்கும் வகையில் மாநில அளவில் சிலம்பப் போட்டிகள் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை தொடங்கி வைத்து, ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசியது:
தமிழகத்தில் கலைகளுக்கு பஞ்சமில்லை. சிலம்பம், வா்மம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் உள்ளன. சிலம்பாட்டக் கலையைப் பற்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்களில் மேற்கோள் உள்ளது. சிலப்பதிகாரத்தில் சிலம்பக் கலை குறித்து விரிவான செய்யுள் உள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இடம் பிடித்துள்ளதுபோல் சிலம்பக் கலையும் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக பயிற்சி அளித்து ஊக்குவித்தால், இக்கலையை உலக அளவில் கொண்டு சோ்க்க முடியும் என்றாா் அவா்.
மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிலம்பக் கலை விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.