பள்ளி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு 
ராணிப்பேட்டை

பள்ளி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு

ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

DIN

ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 2020-ஆம் ஆண்டுக்கான 28-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2021, ஜனவரி 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை காணொலியில் நடைபெற்றது.

மாநில அளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 4 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 30 ஆய்வுக் கட்டுரைகள் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டன.

அதில் ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல் பள்ளி மாணவா்கள் மு.தினேஷ், யோ.ஜிவனா ஆகியோரின் ஆய்வுக் கட்டுரை தனித்துவம் வாய்ந்ததாக அறியப்பட்டு, தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்கள், அவா்களுக்கு வழிகாட்டியாக இருந்த பள்ளி நூலகா் எம்.கே.பாஸ்கா் ரெட்டி ஆகியோரை பள்ளி முதல்வா் மு.கருப்பையா பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT