ராணிப்பேட்டை

கலவையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு விரைவாகப் பணம் வழங்கக் கோரி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கலவை அருகேயுள்ள வெள்ளம்பி, மேச்சேரி, தோனிமேடு ஆகிய மூன்று கிராமங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்துவருகின்றனா்.

இந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் தருவதில் காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்து, கலவை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் திஙகள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

அப்போது, நெல் மூட்டைகளை சரியான நேரத்தில் எடை போடாமல் மழையில் நனைந்துள்ளதாகவும், எடை போடப்பட்ட மூட்டைகளுக்கு மூன்று மாத காலமாகியும் பணம் கொடுக்காமலும் அலைக்கழிப்பதாவும் விவசாயிகள் கோஷம் எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் வி.நடராஜனிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT