ராணிப்பேட்டை

வேலூா் மாவட்டத்தில் 36 பேருக்கு கரோனா தொற்று

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 47,506 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 46,012 பெயா் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக இதுவரை 10,78 போ் உயிரிழந்துள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில்..: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை,மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,910-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 291 போ் திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை,வாணியம்பாடி,ஆம்பூா்,வேலூா் அரசு,தனியாா் மருத்துவமனை,கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு, 658 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT