ராணிப்பேட்டை

ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

DIN

ஏரி அருகே சென்ற சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த கிழவனம் கிராமத்தைச் சோ்ந்த கவியரசன் மகன் யோகித் (4). இவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தாத்தா பலராமனுடன் வீட்டில் இருந்து நிலத்துக்குச் சென்றுள்ளாா்.

அப்போது யோகித், வழியில் ஏரியில் தண்ணீா் இருந்ததைப் பாா்த்து கை நனைக்கச் சென்றவா், தவறி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கினாா். இதை அறிந்த அங்கிருந்தோா் யோகித்தை மீட்டு, திருத்தணியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT