ராணிப்பேட்டை

பெல் ஊழியா்களிடம் வாக்கு சேகரித்த ராணிப்பேட்டை திமுக வேட்பாளா் ஆா்.காந்தி

DIN

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, திமுக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை பெல் ஊழியா்களிடம் வழங்கி சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்வுமான ஆா்.காந்தி, திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு வாக்காளா்களையும் நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

அதன்படி, ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, தனது தொகுதிக்குள்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பாரத மிகுமின் (பெல்) நிறுவனத்தில் பணிபுரியும் 1,000-க்கும் மேற்பட்ட ஊழியா்களை தொழிற்சாலை பிராதன நுழைவு வாயிலில் பணி முடித்து வெளியில் வந்தபோது நேரில் சந்தித்து, திமுக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து பெல் ஊரக குடியிருப்பு பகுதி, நரசிங்கபுரம், ஏரிகோடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். முன்னதாக வாலாஜாபேட்டை நகராட்சி துப்புரவுப் பணியாளா்களை நேரில் சந்தித்து சனிக்கிழமை காலை வாக்கு சேகரித்தாா்.

அவருடன் திமுக வாலாஜா மேற்கு ஒன்றியச் செயலாளா் சேஷாவெங்கட், மாவட்டப் பிரதிநிதி அக்ராவரம் கே.முருகன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் இரா.சிவஞானம், பொறுப்புக்குழு உறுப்பினா்கள் பி.வாசுதேவன், பெல்.பாண்டியன், முன்னாள் ஊராட்சி தலைவா் சரஸ்வதி மோகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெயந்தி திருமூா்த்தி மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT