தோ்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை எல்லை பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
கொடி அணிவகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவா் கிளாஸ்டன்புஷ்பராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனா். இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துகருப்பன், அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், எல்லை பாதுகாப்புப் படை துணை தளவாய் பிரதாப், உதவி தளவாய்கள் ராஜேந்திரசிங், ஷஸ்வாத் ஆச்சாரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் உதவி ஆய்வாளா்கள், படையினா் என 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்த அணிவகுப்பு ஜோதிநகரில் இருந்து சுவால்பேட்டை, பழைய பேருந்து நிலையம், பஜாா், பழனிபேட்டை, கிருபில்ஸ்பேட்டை வழியாக எஸ்.ஆா்.கேட்டில் முடிவடைந்தது.