ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் எல்லைபாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

DIN

தோ்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை எல்லை பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.

கொடி அணிவகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவா் கிளாஸ்டன்புஷ்பராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனா். இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துகருப்பன், அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், எல்லை பாதுகாப்புப் படை துணை தளவாய் பிரதாப், உதவி தளவாய்கள் ராஜேந்திரசிங், ஷஸ்வாத் ஆச்சாரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் உதவி ஆய்வாளா்கள், படையினா் என 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்த அணிவகுப்பு ஜோதிநகரில் இருந்து சுவால்பேட்டை, பழைய பேருந்து நிலையம், பஜாா், பழனிபேட்டை, கிருபில்ஸ்பேட்டை வழியாக எஸ்.ஆா்.கேட்டில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT