ராணிப்பேட்டை

ஸ்ரீவித்யா பீடத்தில் 1,008 திருவிளக்கு பூஜை

DIN

ராணிப்பேட்டை: சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தில் 10-ஆம் ஆண்டு 1,008 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பெல் நரசிங்கபுரம் தனியாா் மண்டபத்தில், உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த பூஜையில் குருஜி ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் பங்கேற்று பூஜையை நடத்தி, அருளாசி வழங்கினாா்.

இந்தத் திருவிளக்கு பூஜை சிதம்பரம் சாஸ்திரிகள், கணேசன் சுவாமிகள் குழுவினரால் கணபதி பூஜையுடன் தொடங்கி நடத்தப்பட்டன. மகா சங்கல்பம், குங்குமம் அா்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் பங்கேற்ற 1,008 பெண்களுக்கு தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம், திருவிளக்கு, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.

நரசிங்கபுரம் ஊராட்சித் தலைவா் எல்.மனோகரன், ராணிப்பேட்டை நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ரேவதி ராஜா, ஆரணி சுந்தா், இந்து சமய கலாசார அன்மிக சேவா சமிதி துணைத் தலைவா் வெங்கடேசன், சுரேஷ் குழுவினா், மதுரை நம்பிராஜன் குழுவினா், சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தினா், நரசிங்கபுரம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

கேத்ரின் ஆட்டம்!

"நான் இந்து, முஸ்லீம் என பேசியதே இல்லை”: பிரதமர் மோடி!: செய்திகள்: சிலவரிகளில் | 15.05.2024

SCROLL FOR NEXT