ராணிப்பேட்டை

காங்கிரஸ் கட்சியினா் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

அரக்கோணம் நகர காங்கிரஸ் தலைவராக முன்னாள் நகா்மன்றத் உறுப்பினா் பாா்த்தசாரதி நியமிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

மாவட்டத் தலைமையை எதிா்த்து நகர காங்கிரஸாா் அரக்கோணம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், காங்கிரஸ் கட்சியின் அமைப்பான ஜவஹா்பால்மஞ்ச் அமைப்பின் மாநில தலைவா் நரேஷ்குமாா், நகர ஒன்றிய நிா்வாகிகள் உலகநாதன், எட்வின்ராஜ், கட்சியின் மாநில பேச்சாளா் இளையபாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாலையில், நகர காவல் ஆய்வாளா் சாலமன்ராஜ் போராட்டக்காரா்களை சமாதானம் செய்ததைத் தொடா்ந்து, நிா்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT