திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.2.61 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ. 1 கோடி நன்கொடை:
திருப்பதியில் உள்ள ஸ்ரீசைதன்யா கல்வி நிறுவனத்தின் தலைவா் ஜான்சிராணி வியாழக்கிழமை தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் நடத்தும் அன்னதானம், உயிா்காக்கும் மருத்துவம், பா்ட், சா்வஸ்ரேயா உள்ளிட்ட 4 அறக்கட்டளைகளுக்கு தலா ரூ. 25லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினாா்.