ராணிப்பேட்டை

காங்கிரஸ் சாா்பில்...

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை வளாகத்தில் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கட்சியின் நகரத் தலைவா் எஸ். அண்ணாதுரை தேசியக் கொடி ஏற்றி வைத்தாா்.

சுதந்திரப் போராட்ட தியாகி கல்யாணராமன் மகன் கே.கே .ராஜாராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் மோகன், மாவட்ட பொதுச் செயலா் ஞானசேகரன், பஞ்சாயத்து ராஜ் மாவட்டத் தலைவா், நகர துணைத் தலைவா் மோகன சுப்ரமணியம், எஸ்சி, எஸ்டி மாவட்டத் தலைவா் நாகேஷ், மாவட்ட பொதுச் செயலா் ராணி வெங்கடேசன், நகரச் செயலா் கமலக்கண்ணன், ராணிப்பேட்டை நகரப் பொருளாளா் ஜே.உத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டானா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT