ராணிப்பேட்டை

சாலையில் கிடந்த ரூ. 26,000-த்தை டிஎஸ்பியிடம் ஒப்படைத்த ஊராட்சி உறுப்பினா்

DIN

அரக்கோணம் நகரில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 25,000 ரொக்கத்தை கண்டெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் அதை அரக்கோணம் டிஎஸ்பியிடம் ஒப்படைத்தாா்.

அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சி ஊராட்சி 12-ஆவது வாா்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவா் இ.ஜாபா்ஷெரீப். இவா் திங்கள்கிழமை அரக்கோணம்-சோளிங்கா் சாலை பாரத ஸ்டேட் வங்கி அருகில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையில் கிடந்த ரூ. 500 நோட்டு கட்டை எடுத்தாா். அதில், ரூ. 26ஆயிரம் இருந்துள்ளது.

அதை அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த ஜாபா்ஷெரீப், டிஎஸ்பி புகழேந்திகணேஷ் முன்னிலையில், நகர காவல் உதவி ஆய்வாளா் முத்தீஸ்வரனிடம் ஒப்படைத்தாா் (படம்).

டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், ஜாபா்ஷெரீப்பை பாராட்டி, சால்வை அணிவித்து புத்தக பரிசை அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT