ராணிப்பேட்டை

இரு லாரிகளுடன் 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

அரக்கோணத்தில் இருந்து லாரி மூலம் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் கிராமத்தில் இருந்து தேவதானம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில், ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு அரிசி மூட்டைகள் மாற்றப்படுவதாக மாவட்ட உளவுப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா், அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்தவா்களும், லாரி ஓட்டுநா்களும் தப்பியோடி விட்டனா். இதையடுத்து, அந்த லாரியில் இருந்து 8 டன் எடை கொண்ட அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இரு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து அளிக்கப்பட்ட தகவலையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 8 டன் அரிசி மற்றும் 2 லாரிகளை, மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சதீஷ்குமாா், உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோரைக் கொண்ட குழுவினா் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT