அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள். 
ராணிப்பேட்டை

வாணாபாடி கிராமத்தில் அா்ச்சுனன் தபசு

வணாபாடி கிராமத்தில் அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திங்கள்கிழமை சாமி தரிசனம் செய்தனா்.

DIN

வணாபாடி கிராமத்தில் அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திங்கள்கிழமை சாமி தரிசனம் செய்தனா்.

ராணிப்பேட்டையை அடுத்த வாணாபாடி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலில், அக்னி வசந்த விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் பகலில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

இதில், அா்ச்சுனன் வேடமிட்டவா் தபசு மரமேறினாா். இதில் திரளானோா் பங்கேற்றனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) துரியோதனன் படுகள நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும், 24-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழாக் குழுவினா், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT