ராணிப்பேட்டை

ஆற்காடு: வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜபெருமாள் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பிரம்மோற்சவம் கடந்த 30 -ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் திருவீதி உலாவும் நடைபெற்றுவருகிறது .

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மகா தீபாரதனை செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

கோயில் நிலையில் இருந்து புறப்பட்ட தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. அதேபோல் தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் கோயிலிலும் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT