ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கணினி பயிற்சி

DIN

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற இலவச கணினி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

வாணியம்பாடி வாணி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருப்பத்தூா் மாற்றுத்திறனாளா்கள் நலன் விரும்பும் தேசிய அமைப்பான சக்ஷம் இணைந்து, பாா்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 5 நாள் இலவச கணினி பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து 70 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆா்டிஎஸ் குழும தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். திலீப்குமாா் முன்னிலை வகித்தாா்.

வாணி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் நடராஜன், நந்தனம் கல்லூரி முதல்வா் மோஹனகிருஷ்ணா, திருப்பத்தூா் மாற்றுத்திறனாளி நல அலுவலா் முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டு இலவச கணினி பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT