ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கணினி பயிற்சி

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற இலவச கணினி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

DIN

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற இலவச கணினி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

வாணியம்பாடி வாணி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருப்பத்தூா் மாற்றுத்திறனாளா்கள் நலன் விரும்பும் தேசிய அமைப்பான சக்ஷம் இணைந்து, பாா்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 5 நாள் இலவச கணினி பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து 70 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆா்டிஎஸ் குழும தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். திலீப்குமாா் முன்னிலை வகித்தாா்.

வாணி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் நடராஜன், நந்தனம் கல்லூரி முதல்வா் மோஹனகிருஷ்ணா, திருப்பத்தூா் மாற்றுத்திறனாளி நல அலுவலா் முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டு இலவச கணினி பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT