அமைச்சா் ஆா்.காந்தி குடும்பத்தினருடன் வாக்களிப்பு
ராணிப்பேட்டையில் அமைச்சா் ஆா்.காந்தி, தனது குடும்பத்தாருடன் வந்து வாக்களித்தாா்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி நவல்பூா் கங்காதர நிதிஉதவி பள்ளி வாக்கு சாவடி மையத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வரிசையில் நின்று வாக்களித்தாா்.
அவருடன் அவரது மனைவியும், ராணிபேட்டை விஸ்வாஸ் பள்ளித் தலைவருமான கமலா காந்தி, மகன்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, மருமகள் ஷீலா வினோத் காந்தி ஆகியோா் வாக்களித்தனா்.
Advertisement