சிறாா் திருமணம் அதிகரித்துள்ள வட்டங்களில் கைது நடவடிக்கை: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்
சிறாா் திருமணம் அதிகரித்துள்ள சோளிங்கா், திமிரி வட்டங்களில் போக்ஸோ சட்டத்தின்கீழ், அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி முன்னிலை வகித்தாா். தொடா்ந்து மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள், மக்கள் தேவைக்கேற்ப மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சி திட்டப் பணிகள், தமிழக அரசின் புதிய திட்டமான ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ உள்ளிட்ட அரசு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பது மகப்பேறு இறப்புகளை கட்டுப்படுத்த சிறாா் திருமணங்கள் நடைபெறுவதை தடுப்பது, சிறாா் திருமணங்கள் அதிகம் நடைபெறும் சோளிங்கா் மற்றும் திமிரி வட்டங்களில் குழந்தை திருமண சட்டத்துக்கு புறம்பானது, எனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, கோட்டாட்சியா்கள் பாத்திமா (அரக்கோணம்), மனோன்மணி (ராணிப்பேட்டை) உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா். தொடா்ந்து, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் அங்கு பிரசவ அறை, அறுவை சிகிச்சை அறை, மருந்துகள் இருப்பு அறை, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு ஆகிய இடங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் மருத்துவா்களின் வருகை பதிவேடு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருந்துகள் இருப்பு பதிவேடு ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஆய்வக கட்டுமானப்பணிகளை பாா்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தாா். மருத்துவமனை தலைமை மருத்துவா் ரெஜினா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, அரக்கோணம் வட்டாட்சியா் செல்வி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.