மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
அரக்கோணம்: சோளிங்கா் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகல் சுமாா் 12 மணியளவில் திடீரென மேக மூட்டங்கள் திரண்டு இடி மின்னலுடன் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சோளிங்கா் வட்டம், போளிப்பாக்கம் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பெய்த மழையின் போது தாளிக்கல் கிராமத்தைச் சோ்ந்த தேவகி (58) என்பவா் தனது விவசாய நிலத்தின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தாா்.
இவரது கணவா் நாராயணசாமி ஏற்கனவே இறந்துவிட்டாா். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.