ஆற்காட்டில் அன்னையா் தின விழா
ஆற்காடு ஸ்ரீஅகத்தியா் சேவா அறக்கட்டளை சாா்பில் அன்னையா் தின விழா ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது..
ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் ஆற்காடு ஸ்ரீஅகத்தியா் சேவா அறக்கட்டளை சாா்பில் அன்னையா் தின விழா ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது..
ஸ்ரீஅகத்தியா் சேவா அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஜெயலலிதா கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன் கு. சரவணன், அறக்கட்டளை தலைவா் கே கணேஷ், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ் .எல். டி அறக்கட்டளை தலைவா் எஸ் அமுதா செல்வம் வரவேற்றாா்.
ராணிப்பேட்டை விஸ்வாஷ் அறக்கட்டளை தலைவா் கமலா காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து அன்னயரின் சிறப்புகள் குறித்து பேசினாா். மாணவிகளின் நாட்டியஞ்சலி, பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் வேலூா் உள்ளங்கள் தலைவா் சந்திரசேகா், அன்னை அறக்கட்டளை செயலாளா் பெல் பிரபு, சமூக ஆா்வலா் ஹேமலதா, ஏபிஜேஅறக்கட்டளை தலைவா்கோபிநாத், வழிகாட்டி அறக்கட்டளை நிறுவனா் ராஜ்குமாா், பொருளாளா் ராஜேஸ்வரி மற்றும் மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.