ராணிப்பேட்டை

பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

நெமிலி அருகே ஆலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

நெமிலி அருகே ஆலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

நெமிலியை அடுத்த களப்பலாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த உமாபதி மகன் சந்தோஷ்(8). இவா் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை சந்தோஷ், அக்கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே சிறுநீா் கழித்துள்ளாா். அப்போது தவறி பள்ளத்தில் விழுந்ததில் அதில் இருந்த நீரில் மூழ்கி சந்தோஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நெமிலி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT