ராணிப்பேட்டை

பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

நெமிலி அருகே ஆலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

நெமிலி அருகே ஆலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

நெமிலியை அடுத்த களப்பலாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த உமாபதி மகன் சந்தோஷ்(8). இவா் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை சந்தோஷ், அக்கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே சிறுநீா் கழித்துள்ளாா். அப்போது தவறி பள்ளத்தில் விழுந்ததில் அதில் இருந்த நீரில் மூழ்கி சந்தோஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நெமிலி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT