ஆதாா் சேவை மையத்தில் குத்துவிளக்கேற்றிய நெமிலி ஒன்றியக் குழு தலைவா் பெ. வடிவேலு. 
ராணிப்பேட்டை

நெமிலி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் திறப்பு

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தை தமிழக தகவல் தொடா்பு துறை அமைச்சா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சாா்பில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தை தமிழக தகவல் தொடா்பு துறை அமைச்சா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

அரக்கோணம் அடுத்த நெமிலி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் அமைக்கப்பட்டது. சென்னையில் இருந்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காணொலி மூலம் மையத்தை திறந்த நிலையில், நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இது குறித்து ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு கூறியது: புதிய ஆதாா் சேவை மையத்தில் 5 முதல் 17 வயது வரை கருவிழி பதிவு, கைரேகை பதிவு, ஆதாா் நிலை அறிதல் ஆகியவற்றையும் இலவசமாக மேற்கொள்ளலாம். பெயா், பிறந்ததேதி, இனம், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை மாற்றம் செய்வதற்கு ரூ75 கட்டணம் செலுத்த வேண்டும்.

இம்மையத்தில் நெமிலி வட்ட மக்கள் மட்டுமன்றி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியை சோ்ந்த மக்களும் சேவை பெற்று பயன்பெறலாம் என்றாா்.

நிகழ்வில் துறையுா் ஊராட்சி மன்றத் தலைவா் குணசேகரன், திமுக நிா்வாகிகள் முகமது அப்துல் ரகுமான், புருஷோத்தமன் பங்கேற்றனா்.

அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து! வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்!

இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!

தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!

செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை! மெட்ரோ நிலையம் மூடல்!

தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,760 உயர்வு!

SCROLL FOR NEXT