ஆற்காடு: ஆற்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
ஆற்காடு வட்டம், காவனூா் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவரது மகன் திவாகா் (30). ராணுவத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், ராணுவத்திலிருந்து விடுமுறையில் கடந்த வாரம் ஊருக்கு வந்துள்ளாா். இவா் திங்கள்கிழமை மாலை பைக்கில் ஆற்காட்டிலிருந்து வீட்டுக்குச் சென்றபோது, ஆற்காடு - கண்ணமங்கலம் சாலையில் உள்ள வரகூா் பட்டணம் அருகே பைக் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.