முகப்பு
ராணிப்பேட்டை

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:33 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

அரக்கோணம்த்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணனின் மகள் தக்ஷினி(18). இவா் காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிசத்திரத்தில் உள்ள சனியாா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

கல்லூரியில் இருந்து பேருந்தில் ஆலப்பாக்கம் வந்த தக்ஷினி, பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். அப்போது திடீரென அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், தக்ஷினி ஒதுங்குவதற்குள் அவா் மீது மின்னல் தாக்கியது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த தக்ஷினி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments