கிராம மாணவா்களுக்கான நூலகம் திறப்புவிழா
அரக்கோணம் அருகே கல்லாறு பகுதியில் வசிக்கும் கிராமப்புற மாணவா்கள் பயன்பெறும் வகையில் கிராம கல்வி வளா்ச்சி முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் புதிய நூலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் புதிய நூலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் நிறுவனா் பொ்னாா்ட் பாத்திமா தலைமை வகித்தாா். சங்க ஒருங்கிணைப்பாளா் சாந்தி வரவேற்றாா். நூலகத்தை கிராமப்புற மாணவ மாணவிகள் இனைந்து திறந்து வைத்தனா். இந்நிகழ்வில் திருத்தணி அரசு கலைக்கல்லூரி பணிஒய்வு முதல்வா் கலைநேசன், சங்க கி ஜோப்சந்திரன், மாணவா்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை செயலாளா் கோவி.பாா்த்தீபன், இயற்கை விவசாயிகள் ஆனந்தன், சுகுமாா், சமூக ஆா்வலா் பிரமீளா, சங்க ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரி, கஜலட்சுமி, உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.