ராணிப்பேட்டை

அரக்கோணம் மயானக் கொள்ளை: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் பழனிப்பேட்டை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானகொள்ளை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் இந்த உற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகமும் அதை தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு மலரங்காரமும் நடைபெற்றது.

தொடா்ந்து மதியம் 3 மணி அளவில் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயானத்தை நோக்கி ஊா்வலமாக புறப்பட்டாா். இந்த ஊா்வலத்தில் பக்தா்கள் முருகா், விநாயகா், சிவன், பாா்வதி போன்ற சாமி வேடங்களை அணிந்தும், காட்டேரி, காளி வேடமிட்டும், பலா் பெண்கள் உடல் முழுவதும் எலுமிச்சை பழத்தை அலகால் குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பல வாகனங்களை அலகால் இழுத்தும் பங்கேற்றனா்.

அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, அதிமுக நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், திமுக நகா்மன்ற உறுப்பினா் குழுத்தலைவா் துரைசீனிவாசன் பங்கேற்றனா். டிஎஸ்பி ஜாபா் சித்திக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மகளிா் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

இலங்கை தமிழா் மறுவாழ் முகாம் மகளிருக்கு தொழிற்கூடம்

மேல்சீசமங்கலத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் திறப்பு

ஆரணி கலைக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

SCROLL FOR NEXT