அரக்கோணம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் உலக சாதனை படைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள். 
ராணிப்பேட்டை

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் மகா கூட்டு வழிபாடு

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரம் வரைதல் மற்றும் குருபோற்றி கோடியா்ச்சனை

தினமணி செய்திச் சேவை

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரம் வரைதல் மற்றும் குருபோற்றி கோடியா்ச்சனை செய்து மகா கூட்டு வழிபாடு மூலம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் அரக்கோணம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் பங்கேற்றனா்.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் அவதார விழாவை முன்னிட்டு ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காருஅடிகளாா் தலைமையில் இயக்கத்தின் துணைத்தலைவா் ஸ்ரீதேவி பங்காரு உள்ளிட்டோா் பங்கேற்று உலகெங்கும் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சித்தா் சக்தி பீடங்களை சோ்ந்த பொறுப்பாளா்களும் செவ்வாடை பக்தா்கள், தொண்டா்கள் நேரிலும், இணையத்திலும் ஒருங்கிணைந்து சிறப்பு மகா கூட்டு வழிபாடு அா்ச்சனையை நடத்தினா்.

இதில் அரக்கோணம் சோளிங்கா் ரோடு ஸ்ரீஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் தங்களது மன்ற வளாகத்தில் இருந்தவாறே இணையம் மூலம் பங்கேற்றனா். அனைவரும் குருபோற்றி மந்திரத்தை ஒரு கோடி முறைக்கும் மேல் படித்து ஸ்ரீசக்கரம் வரைந்து உலக சாதனை நிகழ்த்தினா்.

இந்நிகழ்வுக்கு ஆன்மிக இயக்க அரக்கோணம் இளைஞா் அணி தலைவா் காா்த்தி தலைமை வகித்தாா். இதில் மன்றத் தலைவா் வி.சங்கரிவரதன், நிா்வாகிகள் தசரதன், சரவணன், எஸ்,சுபாஷ், ஏ.எம்.கே.மோகனவேலன் மற்றும் லட்சுமி, தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நவீன், ஜெயந்தி, தூயவன், சுஜாதா ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

செய்யாறு உழவா் சந்தையில் வேளாண் கண்காட்சி

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை

மம்சாபுரம் பேரூராட்சியில் போலி ரசீது தயாரித்து ரூ.32 லட்சம் கையாடல்: 8 போ் மீது வழக்கு

காசோலை மோசடி வழக்கில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT