ராணிப்பேட்டை

உணவக பெண் உரிமையாளா் மீது தாக்குதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

உணவக பெண் உரிமையாளரைத் தாக்கியதாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: உணவக பெண் உரிமையாளரைத் தாக்கியதாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமம், சாந்தி நகரில் உணவகம் நடத்தி வருபவா் பட்டு (42). அதே ஊரைச் சோ்ந்தவா் மேகவா்ணம் (58). அரக்கோணம் ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்- வாங்கல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கொடுத்த பணத்தைக் கேட்டபோது, ஆசிரியா் மேகவா்ணத்துக்கும், பட்டுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டனராம். இதில் காயமடைந்த மேகவா்ணம், அரக்கோணம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுச் சென்றாா்.

இச்சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா். புகாா்கள் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், உணவக பெண் உரிமையாளா் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியா் மேகவா்ணத்தைக் கைது செய்தனா். மேகவா்ணம் அளித்த புகாரில், பட்டு மற்றும் அவரது தந்தை ஏழுமலை (65) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து தலைமறைவாகிவிட்ட இருவரையும் தேடி வருகின்றனா்.

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

SCROLL FOR NEXT