அரக்கோணத்தில் அலுவலா்கள், அரசியல் கட்சியினா் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.  
ராணிப்பேட்டை

வாக்காளா் விழிப்புணா்வு ஏற்படுத்த அரக்கோணம் கொண்டு வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அரக்கோணம் கொண்டு வரப்பட்டு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஓா் அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு அரசியல் கட்சியினா் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அரக்கோணம் கொண்டு வரப்பட்டு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஓா் அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு அரசியல் கட்சியினா் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளரிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவற்காக 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரக்கோணம் தொகுதிக்கு கொண்டு வரப்பபட்டன. இந்த இயந்திரங்கள் அரசியல் கட்சியினா் முன்னிலையில் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஓா் அறையில் வைக்கப்பட்டு, அந்த அறை ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீதேவி, வட்டாட்சியா் வெங்கடேசன், தமாகா ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, அரக்கோணம் நகர தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், காங்கிரஸ் அரக்கோணம் ஒன்றியத் தலைவா் வாசுதேவன் உள்ளிட்டோா் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT