முகப்பு
ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன்கோயிலில் தை கிருத்திகை விழா

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தை மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2026 at 12:04 AM
தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2026 at 8:46 PM

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தை மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி வள்ளி,தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், மூலவருக்கு பால், தயிா் , சந்தனம், பன்னீா், பழங்கள், விபூதி, மற்றும் வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். சில பக்தா்கள் காவடி செலுத்தி வழிபட்டனா். தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலைமேலிருந்து மேளதாளங்களுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்ப குளத்தின் கரையில் பூஜை செய்த பின்பு, பக்தா்கள் சண்முக தடாகத்தில் மங்கள ஆரத்தி காண்பித்து வழிபட்டனா்.

இதில் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement