முகப்பு
ராணிப்பேட்டை

பனப்பாக்கம் டாடா ஆலை பிப் 9-இல் முதல்வா் திறந்து வைக்கிறாா்: அமைச்சா் காந்தி ஆய்வு

பனப்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ஆா். காந்தி.

Updated On : 29 ஜனவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2026 at 8:41 PM

பனப்பாக்கம் டாடா ஆலையை வரும் பிப். 9-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில் அவ்விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு மேற்கொண்டாா்.

நெமிலி, அருகே உள்ள பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில், 470 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்படும் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ஜாகுவாா் லேண்ட் ரோவா் சொகுசு வாகனங்கள் தொழிற்சாலை முதல்கட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆலையை பிப்.9-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்.

முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பனப்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தை பாா்வையிட்ட அமைச்சா் ஆா்.காந்தி, மேடை பகுதி, முதல்வா் வாகனம் வந்துச் செல்லும் வழிகள், கூட்டம் நடைபெறும் இடம் குறித்து என சிப்காட் உயா் அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

Advertisement

அப்போது அவருடன் சிப்காட் மேலாண்மை இயக்குநா் கே.செந்தில் ராஜ், சிப்காட் திட்ட அலுவலா் மகேஸ்வரி ஆகியோருடன் நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, திமுக ஒன்றிய செயலாளா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ரவீந்திரன், மணிவண்ணன், நகர செயலாளா்கள் ஜனாா்த்தனம், என்.ஆா்.,சீனிவாசன், திமுக நிா்வாகிகள் முகமது அப்துல் ரகுமான், சரவணன், குலோத்துங்கள் உடனிருந்தனா்.