வாலாஜாவில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
வாலாஜா வட்டத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராணிப்பேட்டைவாலாஜாவில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
வாலாஜா வட்டத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
வாலாஜா வட்டத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
வாலாஜா வட்டம், வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி எதிரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்கூடம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
இதையடுத்து சென்னை- சித்தூா் - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு மற்றும் தணிக்கை நிதி ரூ.44 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 35 மின் கம்பங்கள், மின் விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தாா்.
ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் செல்வகுமாா், வட்டாட்சியா் நடராஜன் கலந்து கொண்டனா்.