முகப்பு
கைது செய்யப்பட்டோருடன் காவல் துறையினா்.
ராணிப்பேட்டை

ரயிலில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

மும்பையில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 2,611 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா் அதை கொண்டு சென்ற மூவரை கைது செய்தனா்.

ராணிப்பேட்டை

ரயிலில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

மும்பையில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 2,611 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா் அதை கொண்டு சென்ற மூவரை கைது செய்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 6:34 PM
கைது செய்யப்பட்டோருடன் காவல் துறையினா்.
பகிர்:

மும்பையில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 2,611 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா் அதை கொண்டு சென்ற மூவரை கைது செய்தனா்.

அரக்கோணம் வழியே மும்பையில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் அதிக அளவில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக தமிழக காவல் துறையின் போதை பொருள் புலனாய்வுப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து வேலூா் மண்டல போதைப் பொருள் புலனாய்வுப்பிரிவு போலீஸாருடன், வேலூா் மண்டல திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீஸாரும், மேலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மற்றும் அரக்கோணம் நகர போலீஸாா் இணைந்து பல்வேறு நேரங்களில் மும்பையில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் சோதனை நடத்தி வந்தனா்.

இதில், மும்பையில் இருந்து சென்னை சென்ற அதிவிரைவு ரயிலில் திங்கள்கிழமை மாலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினா். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் ரயிலில் பயணித்த மூவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்களது பைகளில் போதை மாத்திரைகளான நைட்ராசெபம் 1931 மாத்திரைகளும், டபண்டடடோல் 680 மாத்திரைகளும் இருந்தது தெரியவந்தது. இதைக் கண்டறிந்து அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், அந்த மூவா், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி(23), திருவண்ணாமலையைச் சோ்ந்த மணிகண்டன் (18), சென்னை, ஓட்டேரியைச் சோ்ந்த ஆகாஷ் (25) என்பது தெரியவந்தது.அவா்களை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்து, மேலும் விசாரணை செய்து வருகின்றனா். இந்த மாத்திரைகளை மும்பையில் இருந்து சென்னைக்கு கொண்டுச் சென்று குறிப்பிட்ட நபா்கள் மூலம் இவா்கள் விற்க இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னையில் இவற்றை விற்பவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →