முகப்பு
ராணிப்பேட்டை

பறக்கும் படையினா் சோதனை: ரூ.95,000 பறிமுதல்

சோளிங்கரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் கணக்கில் வராத ரூ .95 ஆயிரத்தை பறிமுதல்

Updated On : 17 மார்ச், 2026 at 4:39 AM
சோளிங்கா் வட்டாட்சியா் செல்வியிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

அரக்கோணம்: சோளிங்கரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் கணக்கில் வராத ரூ .95 ஆயிரத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

பாணாவரத்தில் சோளிங்கபுரம் ரயில்நிலைய மேம்பாலம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெய்கிஷன் தலைமையிலான அலுவலா்கள் சோதனை நடத்தினா். அப்போது பாணாவரத்தைச் சோ்ந்த மின்வாகன பொருள்கள் விற்பனையக உரிமையாளா் தரணீதரன் என்பவா் காரில் கொண்டுச் சென்ற கணக்கில் வராத ரூ.95ஆயிரத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் செல்வியிடம் ஒப்படைத்தனா்.