பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்
ஆற்காடு அருகே பைக் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆற்காடு அருகே பைக் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
அடுத்த கீழ்விஷாரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்தவா் கல்யாணி (55) கூலி தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகம் அருகே சாலையை கடந்துள்ளாா்.
அப்போது அந்த வழியாக சென்ற பைக் மோதியதில் காயம்அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.