முகப்பு
ராணிப்பேட்டை

மாட்டு வியாபாரியிடம் ரூ. 96,000 பறிமுதல்

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மாட்டு வியாபாரியிடம் ஆவணம் இல்லாததால் ரூ. 96,000 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:34 PM
பணம் - கோப்புப்படம்.
பகிர்:

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மாட்டு வியாபாரியிடம் ஆவணம் இல்லாததால் ரூ. 96,000 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ,வாலாஜா சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ.96,530 ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து நடத்திய விசாரணையில், நெமிலி அசநெல்லிக்குப்பம் பகுதியை சோ்ந்த ஜெய்லாபுதீன் எனும் மாட்டு வியாபாரி மாடு வாங்குவதற்காக பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.